Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராமாயணத்தில் வெட்டப்படும் ராவணன் தலை மீண்டும், மீண்டும் முளைப்பது போல அந்தரங்க வீடியோக்கள் நீக்கினாலும் பரவுகின்றன: ஐகோர்ட் கவலை

சென்னை: இணையதளங்களில் பகிரப்பட்ட தனது அந்தரங்க வீடியோக்களை அகற்றக் வேண்டும் என கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார் இந்த வழக்கானது 2 மாதங்களாக நடைபெற்றுவருகிறது. குறிப்பாக திருமணத்திற்கு முன்னர் தனது ஆண் நண்பரோடு இருந்த விடியோக்கள் அனைத்தும் இணையதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

இந்த வழக்கானது உயர்நிதிமன்ற நீதிபதி ஆனந்த் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது கடந்த 2, 3 முறை விசாரணைக்கு வந்தபோது நீதி தனது கவலையை தெரிவித்திருந்தார். உடனே அகற்றுமாறு சொல்லியிருந்தார் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞர் அப்துல்குமார் ஆஜராகி பாதிக்கப்பட்ட பெண் வழக்கின் வீடியோ மற்றும் புகைப்படக்கள் மேலும் 13 இணையதளங்களில் பதிவாகி உள்ளதாகவும் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பொது இந்தியாவில் உள்ள 400 சட்டவிரோத இணையதளங்களை முடக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதுக்கு ஒன்றிய அரசு தரப்பியில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு சைபர் கிரைம் தாக்குதலுக்கு உள்ளானபோது பெண்கள் நேரடியாக தங்களது விடியோக்களை புகைப்படங்களை அகற்றுவது தொடர்பாகவும் எளிதாக அணைங்கும் வகையில் நிலையான வழிகாட்டு ஒன்றியாராசு வகுத்துவருவதால் இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து நீதிபதி குறிப்பிடும் பொது ராமாயணத்தில் ராவணனின் தலை ஓவ்வொரு முறை வெட்டப்படும்பொழுது மீண்டும் மீண்டும் முளைப்பதுபோல இங்கு அந்தரங்க விடியோக்களும் இணையதளங்களில் மீண்டும் மீண்டும் இணையத்தில் முளைத்து கொண்டேவருகிறது.

என தனது கவலையை தெரிவித்தார் அதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு தரப்பில் கூறிய வேண்டுகோளிற்கு இந்த வழிகாட்டு விதிமுறைகளை தாக்கல் செய்ய கோரி வழக்கின் விசாரணையை வரும் 19 தேதி தள்ளிவைப்பதாக நீதிபதி உத்தரவுட்டுள்ளார்.