Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இதுவரை 6 கோடி பேர் வருமான வரி தாக்கல்: நாளை கடைசி தேதி

புதுடெல்லி: 2025-26ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையுடன் முடிய உள்ள நிலையில், இதுவரை 6 கோடிக்கும் அதிகமானோர் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். 2024-25ம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கான வருமான வரி தாக்கல் செய்யும் அவகாசத்தை ஜூலை 31ம் தேதியிலிருந்து செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை கடந்த மே மாதம் அறிவித்தது. இந்த கூடுதல் அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. அதன்பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அபராதம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் வருமான வரித்துறை அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில், ‘‘இதுவரை 6 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த மைல்கல்லை அடைய உதவிய வரி செலுத்துவோர் மற்றும் வரி நிபுணர்களுக்கு நன்றி. ஐடிஆர் தாக்கல் செய்யாத வரி செலுத்துவோர் கடைசி நிமிட அவசரத்தை தவிர்க்க விரைவில் ரிட்டன்களை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.

கடந்த 2023ல் 6.77 கோடி பேரும், 2024ல் 7.28 கோடி பேரும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.