Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்ட விரோத சூதாட்ட செயலி வழக்கு மாஜி பெண் எம்பியிடம் அமலாக்க அதிகாரிகள் விசாரணை

புதுடெல்லி: சட்​ட​விரோத சூதாட்ட செயலிகள் ஏராள​மான முதலீட்​டாளர்​களின் கோடிக் கணக்​கான பணத்தை மோசடி செய்​ததுடன் கோடிக்​கணக்​கில் வரி ஏய்ப்பு செய்​த​தாக​வும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்​பாக அமலாக்​கத் துறை வழக்கு பதிவு செய்து விசா​ரித்து வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக, 1xBet நிறு​வனத்​துக்கு எதி​ரான பண மோசடி வழக்கை அமலாக்​கத் துறை விசா​ரித்து வரு​கிறது. இந்த வழக்​கில் முன்னாள் கிரிக்​கெட் வீரர்​கள் சுரேஷ் ரெய்னா,ஷிகர் தவான் ஆகியோரிடம் அமலாக்​கத் துறை ஏற்​கெனவே விசா​ரணை நடத்​தி​யது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜராகுமாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாஜி எம்பியும் நடிகையுமான மிமி சக்ரவர்த்திக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மிமி சக்ரவர்த்தி (36) நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.