மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்து ஆலோசித்தேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
சென்னை: மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை என்றும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்து ஆலோசித்தேன் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திமுக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை.
உயிராக நம்மை இயக்கும் திமுகவின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்த போது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர, ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.