இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.49 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.49 கோடி மதிப்பில் 4 கோயில்களில் 4 புதிய திட்டப்பணிகள் மற்றும் உதவி ஆணையர் அலுவலக கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.48 கோடி மதிப்பில் 7 கோயில்களில் 13 முடிவுற்ற பணிகள் மற்றும் இணை ஆணையர் அலுவலகம், 13 ஆய்வாளர் அலுவலகங்களை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.