மும்பை: ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுகளில் இருந்து அதானி குழுமத்தை செபி விடுவித்தது. அதானி குழுமம் நிதி முறைகேடுகளில் ஈடுபடவில்லை என இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் அறிவித்துள்ளது. அதானி நிறுவனங்கள் மறைமுகமாக 2020ல் ரூ.620 கோடியை ஆடிகார்ப் எண்டர்பிரைசஸுக்கு தந்ததாக புகார் எழுந்தது. ஆடிகார்ப் எண்டர்பிரைசஸுக்கு ரூ.620 கோடி தந்ததை நிதி நிலை அறிக்கையில் அதானி கூறவில்லை என புகார் எழுந்தது. மறுபுறம் ஆடிகார்ப் ரூ.610 கோடியை அதானி பவர் நிறுவனத்துக்கு கடனாக தந்ததாக கூறப்பட்டுள்ளது.
+
Advertisement