Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ.87,200க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.87,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரூ.59 ஆயித்திற்கு விற்கப்பட்ட தங்கம் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. மாதந்தோறும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்து வந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தில் இருந்தன. இந்நிலையில் மாத தொடக்கான நேற்று முன்தினமும் தங்கம் விலை உயர்வை சந்தித்தது. அதுவும் அன்றைய தினம் தங்கம் விலை காலை, மாலை என உயர்ந்தது. காலையில் பவுனுக்கு ரூ.240, மாலையில் ரூ.480 அதிகரித்து ஒரு பவுன் ரூ.87,600 என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது. நேற்று காலையில் தங்கம் விலையில் திடீரென மாற்றம் காணப்பட்டது.

அதாவது, நேற்று காலையில் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.10,880க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.87,040க்கும் விற்பனையானது. மாலையில் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டு நகை வாங்குவோரை மீண்டும் அதிர்ச்சியடைய செய்தது. அதாவது, கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10950க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.87600க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.86,720க்கும், ஒரு கிராம் ரூ.10,840க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.161க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 61 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.880 குறைந்த நிலையில், மாலையில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை காலையில் கிராமுக்கு ரூ.110 குறைந்த நிலையில், மாலையில் ரூ.60 உயர்ந்துள்ளது. தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து கிராம் ரூ.10,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லைறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ. 102க்கு விற்பனை செய்யப்படுகிறது.