Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜி.எஸ்.டி வரி குறைப்பை வரவேற்று எடப்பாடி பழனிசாமி பதிவு பாஜகவின் குரலாக அவர் பேசுவதை காட்டுகிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

சென்னை: ஜி.எஸ்.டி வரி குறைப்பை வரவேற்று எடப்பாடி பழனிசாமி பதிவு பாஜகவின் குரலாக அவர் பேசுவதை காட்டுகிறது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர்,

"கூட்டணிக்காக மாநில உரிமையை விட்டுகொடுப்பதா?

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக ஒன்றிய அரசிடம் மாநில நலனை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தாதது ஏன் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டின் உரிமை மற்றும் கூட்டாட்சி நீதிக்காக எடப்பாடி குரல் கொடுக்க வேண்டும். வளர்ந்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலத்துக்கு ஒன்றிய அரசின் பங்களிப்பு தேவை என்பது எடப்பாடிக்கு நன்கு தெரியும்.

பாஜகவின் குரலாக எடப்பாடி ஒலிக்கிறார்: தங்கம் தென்னரசு

பாஜகவின் குரலாக எடப்பாடி பழனிசாமி ஒலிக்கிறார். ஜி.எஸ்.டி வரி குறைப்பை வரவேற்று எடப்பாடி பழனிசாமி பதிவு பாஜகவின் குரலாக அவர் பேசுவதை காட்டுகிறது. ஜிஎஸ்டி வரி மாற்றங்களை எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக பாராட்டியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு உரிய நிதி பங்கீடு -இபிஎஸ் வலியுறுத்தாதது ஏன்?

ஆனால் தமிழ்நாட்டுக்கு உரிய நிதி பங்கீடு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிடாதது

ஏன். மாநில அரசின் வரி வருவாய், நிதி சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என எடப்பாடி வலியுறுத்தாதது ஏன்.

மாநில உரிமைக்காக எடப்பாடி குரல் கொடுக்க வேண்டும்

தேர்தல் நெருங்குவதால் மக்களின் உரிமையை புறக்கணித்து கூட்டணிக்காக பாஜகவை சமாதானப்படுத்த எடப்பாடி முயற்சி. இவ்வாறு தெரிவித்தார்.