Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிக்கான குரூப் 1 மெயின் தேர்வு வரும் 1ம் தேதி தொடக்கம்: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவுரை

சென்ைன: துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிக்கான குரூப் 1 பணிக்கான மெயின் தேர்வு வரும் 1ம் தேதி தொடங்குகிறது.தேர்வு எழுதுபவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி பல்வேறு அறிவுரை வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்பட 78 காலி பணியிடங்கள். அதோடு உதவி வனப் பாதுகாவலர் 2 காலியிடங்களுக்கான குருப் 1 ஏ பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இப்பதவிக்கான மெயின் தேர்வு வருகிற 1ம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் மெயின் தேர்வு எழுதுபவர்களுக்கான பல்வேறு அறிவுரைகளை டின்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (குரூப் 1 பணிகள்)-இல் உள்ள பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு வருகிற 1ம் தேதி, 2, 3, 4ம் தேதி ஆகிய நாட்களில் முற்பகலில் சென்னையில் மட்டும் 18 மையங்களில் நடத்தப்பட உள்ளது.

தேர்வுக் கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் (10 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோகிராப் செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எல்லா மையங்களிலும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. தேர்வர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று, அதாவது 1, 2, 3 மற்றும் 4ம் தேதி முற்பகலில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்கு தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு காலை 9 மணிக்கு முன்னரே செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

மேலும், வினா விடைத்தாள் தொகுப்பில் கருமை நிற மை பேனாக்களைத் தவிர மற்ற நிற மை பேனாக்களை(வண்ணப் பென்சில்கள், வண்ண மைப்பேனா) உபயோகப்படுத்தக்கூடாது. தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் விரிவாகப் படித்து முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.