Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்று கொட்டினால் குண்டாஸ் விதிக்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் !!

சென்னை : தமிழ்நாட்டில் உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்று கொட்டினால் குண்டாஸ் விதிக்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவ கழிவுகளை கொட்டினால், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால், விசாரணையின்றி சிறை தண்டனை விதிக்கும் மசோதா, கடந்த ஏப்ரல், மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆளுநர் ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி தமிழ்நாட்டில் உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்று குவித்தாலோ, அண்டை மாநிலங்களில் இருந்து வந்து கொட்டினாலோ, இன்று குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்படும். புதிய சட்டத்தின்படி, மருத்துவக் கழிவுகளை முறையற்று கொட்டுபவர்களின் சொத்துக்களை கண்டறிந்து பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்று குவிப்பது பொது சுகாதாரத்திற்கும் சுற்றுசூழலுக்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.