Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அரசு விதிகளை மீறி பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு

பரமக்குடி : பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட காடரந்தகுடி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளது.இந்நிலையில் பனைமரம் தமிழக அரசின் மாநில மரமாக விளங்கி வருகிறது.

மேலும் அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாப்பதற்காக அரசு சட்டம் இயற்றியுள்ள நிலையில், பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில் காடரந்தகுடியில் தனியார் பட்டா நிலங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட பனை மரங்களை மர்ம நபர்கள் சிலர் அரசு உத்தரவை மீறி வெட்டி செங்கல் சூளை மற்றும் கட்டுமான பணிகளுக்கு விற்று உள்ளனர்.

இது குறித்து கிராமத்தினர் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்ததின் பேரில், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் வெட்டப்பட்ட மரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.