Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வலுக்கட்டாயமாக கடத்தி சென்று கரும்பு தோட்டத்தில் சிறுமி பலாத்காரம்: கர்நாடகாவில் பயங்கரம்

பெலகாவி: கர்நாடகாவில் 13 வயது சிறுமியை கரும்பு காட்டுக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 13 வயது சிறுமியை மர்ம நபர்கள் சிலர் வலுக்கட்டாயமாக அருகில் இருந்த கரும்பு தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றனர். அங்கு அந்தச் சிறுமியைச் சித்திரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி முர்கோட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் மணிகண்டா தின்னிமணி மற்றும் ஈரண்ணா சங்கம்மனவர் ஆகிய இரண்டு இளைஞர்கள் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த இரண்டு குற்றவாளிகளையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பெலகாவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பீமாசங்கர் குலேட் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. கைதான இருவரில் ஒருவன் வன்கொடுமையில் ஈடுபட்டதும், மற்றொருவன் யாருக்கும் தெரியாமல் இருக்க காவல் காத்து நின்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்தே சிறுமி புகார் அளித்துள்ளார்; இருப்பினும், இந்தத் தாமதம் வழக்கின் விசாரணையைப் பாதிக்காது. பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்’ என்று உறுதியளித்துள்ளார்.