நெல்லை: கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான ஜெயபாலன் ஜாமின் மனு நவ.10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. காதல் விவகாரத்தில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுர்ஜித், சரவணன், ஜெயபாலன் கைது செய்யப்பட்டனர். 2வது முறையாக ஜெயபாலன் தாக்கல் செய்த ஜாமின் மனு விசாரணையை நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஏற்கெனவே ஜெயபாலனின் ஜாமின் மனுவை நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
+
Advertisement
