Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த கிராம மக்கள்!

பெங்களூரு: சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியைச் ஒட்டிய விவசாய நிலங்களில் புலிகள் நடமாட்டம் உள்ளதாகவும், கால்நடைகளை கொன்று வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், பெயளரவுக்கு கூண்டு வைத்துவிட்டு மட்டும் சென்றுவிடுவதாக தெரிவித்தனர். இந்த நிலையில் அங்கு ஆய்வுக்கு சென்ற வனத்துறையினரை, கிராம மக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.

அப்போது முறையாக பதில் அளிக்கவில்லை என தெரிவித்து, வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பத்து பேரையும் புலியை பிடிக்க அமைத்த கூண்டில் அடைத்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் அவர்களை மீட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே வனப்பகுதியில் கடினமான சூழலில் பணிபுரியும் வனத்துறையினர் மீதான இந்த செயல், அவர்களது மன உறுதி, பணி சூழலை பாதிக்கும் என்று விமர்சனம் எழுந்துள்ளது.