புதுடெல்லி: பிளிப்கார்ட் இணைய விற்பனை நிறுவனத்துக்கு சொந்தமான மிந்த்ரா ஈ காமர்ஸ் நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டில் மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை வௌியிட்ட அறிக்கையில்,
“மிந்த்ரா மொத்த விற்பனை செய்வதாக கூறி, பல்பொருள் சில்லறை விற்பனையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. ஆனால், மொத்த வணிகம் என்ற பெயரில், வௌிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1,654.35 கோடி முதலீடுகளை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்போதுள்ள நேரடி அந்நிய முதலீட்டு வழிகாட்டுதல்களை மீறுவதாக உள்ளது. இதையடுத்து மிந்த்ரா மற்றும் அதனுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் மீது அந்நிய நேரடி முதலீடு மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.