Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உணவே மருந்து!

* மகிழ மரக்காயை/இலையை கஷாயம் செய்து வாய் கொப்பழித்தால் பல் நோய்கள் வராது.

* ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டுக் கொண்டால் பல் வலி சரியாகும்.

* படுக்கைக்கு செல்லும் முன் மாதுளம் பழம் சாப்பிட்டால் குடல் புழுக்கள் அழியும்.

* அண்ணாசிப் பழம் அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் குணமாகும்.

* உடம்பில் சேர்ந்துள்ள மருந்து நஞ்சுகளை நீக்க ஒரு பிடி அருகம்புல், 10 மிளகு, 2 கிராம்பு, சீரகம் சேர்த்து பசும்பாலில் சாப்பிடவும்.

* அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குணமாகும்.

* தினம் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

* நெல்லி வற்றல், பச்சைப்பயிறு கஷாயம் காலை மாலை சாப்பிட்டால் தலை சுற்றல், ரத்தக் கொதிப்பு சரியாகும்.

* தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வர அல்சர் சரியாகும்.

* மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

* புதினா இலையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கொளாறுகள் சரியாகும்.

* அன்னாசி பழச்சாறு சாப்பிட்டால் சிறுநீர் கடுப்பு நீங்கும்.

* பாகற்காய் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை கட்டுப்படும்.

* வாழைப் பூவை பருப்புடன் சமைத்து சாப்பிட்டால் கை, கால் எரிச்சல் குணமாகும்.

* கானா வாழை இலையை மைய அரைத்து பூச படுக்கைப்புண் குணமாகும்.

* ஆடா தொடா இலையை சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் மூச்சுத்திணறல் சரியாகும்.

- விமலா

சடையப்பன்