கே.ஆர்.எஸ். அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 80,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது 14,000 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடியை தாண்டும்.
+
Advertisement