Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக மீனவர்களின் 4 படகுகளை சிறைபிடித்து 35 பேரை கைது செய்த‌து இலங்கை கடற்படை!

கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் 3 விசைப்படகுகள், ஒரு நாட்டுப் படகை பறிமுதல் செய்தது. தொடர்ந்து மீனவர்களிடம் இலங்கை கடற்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது ஆண்டாண்டு காலமாக தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 35 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும் மீனவர்களிடமிருந்து 3 விசைப்படகுகள், ஒரு நாட்டுப்படகு ஆகியவற்றையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. நாட்டுப்படகில் இருந்த 4 மீனவர்கள், 3 விசைப்படகுகளில் இருந்த 31 பேர் என மொத்தம் 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்று நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

நேற்று மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டியடித்து. இந்நிலையில் இன்று மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.