சென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஏ.வி.எம். நிறுவனத்தின் இயக்குநர் ஏ.வி.எம்.சரவணன் (86) வயதுமூப்பு காரணமாக காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களை ஏ.வி.எம்.நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.வி.எம்.சரவணன் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர். ஏவிஎம் ஸ்டுடியோ மூன்றாவது தளத்தில் அவர்களுக்கு இன்று மாலை 3.30 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலம் மாலை 4.00 மணியளவில் புறப்பட்டு ஏ வி எம் ஸ்டுடியோ பின்புறம் உள்ள மயானத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெறும்.
+
Advertisement

