Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரபல மலையாள பெண் எழுத்தாளர் தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே அவன்னூர் பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி வினீதா (44), பிரபல மலையாள எழுத்தாளர். ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார். பாரதிய தலித் இலக்கிய அகாடமியின் கடந்த 2019ம் ஆண்டின் சிறந்த எழுத்தாளருக்கான விருது இவருக்கு கிடைத்துள்ளது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்றிரவு வழக்கம் போல அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். வீனிதா, தனி அறையில் தூங்கினார். இன்று காலையில் ராஜு மற்றும் மகன்கள் எழுந்தனர். வினீதா எழும்பவில்லை.

உடனே அவர், படுத்திருந்த அறையை பார்த்தபோது, தூக்கில் பிணமாக கிடந்தார். உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் திருச்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 13ம் தேதிதான் வினீதா எழுதிய ஒரு நூல் வெளியீட்டு விழா திருச்சூரில் நடந்தது குறிப்பிடத்தக்கதாகும். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.