Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா விவகாரம்: மாதம்பட்டி ரங்கராஜுக்கு போலீஸ் சம்மன்!!

சென்னை: ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகாரில் விசாரணைக்கு ஆஜராக மாதம்பட்டி ரங்கராஜுக்கு போலீஸ் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கும் திருமணமானது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த வழக்கு, பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவில் துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரிக்கப்படுகிறது. ரங்கராஜின் கேட்டரிங் நிறுவனம், ஜாயின் பதிவுகள் காரணமாக ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது, அங்கு ஜாய்க்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22, 2025 அன்று, ஜாய் கிரிசில்டாவிடம் பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், ஜாய் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை ஒப்படைத்தார். ரங்கராஜ், ஏற்கனவே ஷ்ருதி என்பவரை மணந்தவர் என்பதால், ஜாய் தன்னை ஏமாற்றி, கர்ப்ப காலத்தில் கைவிட்டதாகவும், தனிப்பட்ட உள்ளடக்கங்களை பகிர்ந்ததாகவும் கூறினார்.

போலீஸ், IPC பிரிவுகள் 420 (ஏமாற்றல்), 506 (மிரட்டல்), 354 (துன்புறுத்தல்) ஆகியவற்றின் கீழ் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளது. ரங்கராஜ், இதுவரை பகிரங்கமாக பதிலளிக்கவில்லை. ஜாய் கிரிசில்டா, செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேசவில்லை. எனக்கும், பிறக்க இருக்கும் குழந்தைக்கும் நீதி கோரியே சமூக ஊடகங்களில் பதிவிட்டேன். அந்த நிறுவனத்திற்கு ரூ.11 கோடி இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை,” என்று தெரிவித்தார். இதனையடுத்து, நீலாங்கரை காவல்நிலையத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக போலீசார் மாதம்பட்டி ரங்கராஜிற்கு சம்மன் அனுப்பியுள்ளது.