ஜூன்-07: பெட்ரோல் விலை ரூ.107.77, டீசல் விலை ரூ.99.55- க்கு விற்பனை!

  சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை ஒரு கிலோ ரூ.96.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு...

சிஎஸ்கே அணி வீரர் ஆயுஷ் மத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகல்

சென்னை: சிஎஸ்கே அணி வீரர் ஆயுஷ் மத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகினார். இவரின் காயத்திற்கு 6 முதல் 12 வாரங்கள் வரை சிகிச்சை தேவைப்படும் என்பதால் அவர் இத்தொடரிலிருந்து விலகியதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...

மீண்டும் உயரும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.560 உயர்வு

  சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்திலேயே ஆபரண தங்கத்தின் விலை லட்சம் ரூபாயை எட்டியது. கடந்த ஜன.29ம் தேதி ஒரு சவரன் விலை ரூ.1.34 லட்சத்தை எட்டியது. இந்தநிலையில், இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன....

1 ஏக்கரில் தினமும் ரூ.4 ஆயிரம்... செம்மையான லாபம் தரும் சேலத்து செவ்வரளி!

சேலத்தில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் எட்டு கி.மீ தொலைவில் இருக்கிறது பனமரத்துப்பட்டி கிராமம். சுமார் ஆயிரம் வீடுகளிருக்கும் இந்த கிராமத்தின் பிரதான விவசாயத்தொழில் செவ்வரளி சாகுபடிதான். எந்தப் பக்கம் திரும்பினாலும் செவ்வரளித் தோட்டமும், காலை மாலை என இரண்டு வேளைகளிலும் பூ பறிக்கும் ஆட்கள் கூட்டமும்தான் இவ்வூரில் நிறைந்திருக்கும். இத்தகைய கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக...

ஏக்கருக்கு ரூ.11 லட்சம்...கலக்கலான வருமானம் தரும் கண்வலிக்கிழங்கு சாகுபடி!

கரூரை ஒட்டிய அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் போன்ற பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பிராதனப் பயிர்களில் கண்வலிக்கிழங்குக்கு முக்கிய இடம் உண்டு. கிழங்கிலிருந்து வளரும் இப்பயிரில்தான் தமிழகத்தின் தேசிய மலரான செங்காந்தள் மலர் பூக்கிறது. இச்செடியில் இருந்து கிடைக்கும் விதைகளில் அதிக மருத்துவப்பலன்கள் மிகுந்திருப்பதால், அந்த விதைகள் நல்ல விலைக்கு விற்பனை ஆகின்றன. அந்த விதைகளை மகசூலாக...

மானாவாரி நிலக்கடலையிலும் மகசூல் அள்ளலாம்!

நம் நாட்டில் மானாவாரி நிலங்கள் அதிகளவில் உள்ளன. இத்தகைய மானாவாரி நிலங்களுக்கென்றே சில பயிர்கள் காலம் காலமாகவே சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் நிலக்கடலைக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. ஆனால் மானாவாரி நிலங்களில் பயிரிடப்படும் நிலக்கடலையில் மகசூல் சற்று குறைவாகவே கிடைத்து வருகிறது. பருவம் தவறிய மழை, மழை அளவில் நிலையில்லாத தன்மை, குறைந்த கால...

ஆலைக்கு பாதி... அச்சு வெல்லத்திற்கு மீதி...கரும்பு சாகுபடியில் ஒரு சூப்பர் கணக்கு!

எனது தாத்தா, அவருக்கு பின் என் அப்பா, இப்போது நான் என 3 தலைமுறையாக ஆலைக்கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். ஆலைக்கு கரும்பை வெட்டி அனுப்பினால் கிடைக்கும் லாபம் குறைந்து கொண்டே வந்தது. அதனால்தான் எனது தாத்தா ஆலைக்கு பாதி, அச்சு வெல்லத்திற்கு மீதி என்று மாற்றி யோசித்து அச்சு வெல்லம் தயாரிக்க ஆரம்பித்தார். அதை...

பப்பாளியில் தொடர் வருமானம்...விபரமான முறைகளைக் கையாளும் விருதுநகர் விவசாயி!

பப்பாளியில் தொடர் வருமானம் பெறும் ``3 ஏக்கர்ல பப்பாளி மரங்களை வளர்க்கறோம். 6 வருஷமா இந்த பப்பாளி சாகுபடியை தொடர்ச்சியா செய்றோம். ரெகுலரா ஒருநாள் விட்டு ஒருநாள் வருவாய் கிடைக்கற மாதிரி விவசாயம் பண்ணணும்ன்றதுக்காகவே இந்த பப்பாளி சாகுபடியை தேர்ந்தெடுத்தேன்” எனத் பேசத்தொடங்கினார் சரவணகுமார். டிப்ளமோ டீசல் மெக்கானிக் படித்த இவர் விருதுநகர் மாவட்டம் பாம்பாட்டி...

பாரம்பரிய நெல் சாகுபடி... நாட்டு மாடுகள் வளர்ப்பு...சாதித்துக்காட்டும் பட்டதாரி விவசாயி!

தற்போதைய நாகரீக வாழ்க்கையில் படித்த இளைஞர்கள் பலர் வெளியூர் மற்றும் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, துபாய் போன்ற வெளிநாடுகளில் பணிபுரியவே அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் ஒருசிலர் மட்டுமே பட்டப்படிப்பு படித்தாலும் தங்கள் பூர்வீக தொழிலான விவசாயத்தைத் தொடர ஆர்வம் கொள்கிறார்கள். சாத்தான்குளம் கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் சுரேஷ் கண்ணன் என்ற இளைஞரும்...

மகத்துவம் மிகுந்த மண் பரிசோதனை!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை, தமிழ்நாடு அரசின் நலத்துறை ஆகியவை சார்பில்“பல்வேறு பயிர்களுக்கு மண் வளத்திற்கும் பயிர் மகசூல் இலக்கிற்கும் ஏற்ற உரப் பரிந்துரைகள்” என்ற தலைப்பில் மண் பரிசோதனை ஆய்வகத்தில் பணிபுரியும் வேளாண் அலுவலர்களுக்கான பயிற்சித் திட்டம் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல்...