நாட்டு விதைகளுக்கு மட்டுமே அனுமதி!

படித்தது பி.இ. செய்வது இயற்கை விவசாயம். நாட்டு ரக விதைகளை சேகரிப்பதும், அவற்றைப் பரவலாக்குவதுமே முழுநேர வேலை. இப்படி, படிப்பிற்கும் வேலைக்கும் சம்பந்தமில்லாமல், விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் இயற்கை வெள்ளாமைக்கு வந்தவர் ஹானஸ்ட் ராஜ். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூருக்கு அருகேயுள்ள நாகம்பட்டியைச் சேர்ந்த இவர், அந்தப் பகுதியில் பலராலும் அறியப்பட்ட இயற்கை விவசாயியாக பரிணமித்திருக்கிறார்....

வரகு விளையுது... வருமானம் பெருகுது!

5 ஏக்கர் விவசாயம் பண்றோம். அதுல ஒரு ஏக்கர்ல வரகு போட்டிருக்கோம். வரகுல உழவு ஓட்றது, விதைக்கறது, ரெண்டு களை எடுக்குறது மட்டுந்தான் வேலை. களையைக் கூட நாங்களே எடுத்துடுவோம். அறுவடை செய்றதுக்கு மட்டும் 4 ஆள் வைப்போம். கட்டு கட்றதை நாங்களாவே பார்த்துப்போம். வைக்கோலை நாங்க மாட்டுக்கு தீவனமா பயன்படுத்திக்கறோம்” என வரகு சாகுபடியின்...

தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசோலா!

கால்நடை தீவனமாகவும், நெல் வயலுக்கு நல்ல வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படும் அசோலா வளர்ப்புக்கு உகந்த சூழல் குறித்து கடந்த இதழில் பார்த்தோம். அசோலாவின் வளர்ச்சிக்கு வேறு என்னென்ன அம்சங்கள் தேவை என்பதை இந்த இதழில் காணலாம். காற்றில் ஈரப்பதம் அசோலா வளர்ச்சிக்கு காற்றில் ஈரப்பதமானது 85 - 90 சதவீதம் இருக்க வேண்டும். ஈரப்பதமானது 60...

உயர்வு தரும் உற்பத்தி மையங்கள்!

உயிரிப்பூச்சிக்கொல்லி தொடர்பான சில தகவல்களை கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக சில முக்கிய தகவல்களை இந்த இதழில் பார்ப்போம்.உயிரிப்பூச்சிக் கட்டுப்பாட்டு மையம் அமைக்க சில அடிப்படைத் தேவைகள் உள்ளன. அவற்றில் நிலம், கட்டிடம், உபகரணங்கள், மூலப்பொருட்கள், மின் ஆற்றல் உள்ளிட்டவை மிகவும் அவசியம். இதுகுறித்து கொஞ்சம் விரிவாக பார்ப்போம். நிலம் பூச்சிகளை வளர்க்கும் அறை,...

மரம் வளர்ப்புக்காக நெடும்பயணம்!

புதுக்கோட்டையில் மரம் ராஜா என்றால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. மரம் வளர்ப்பை ஒரு சேவையாகவே செய்து வரும் இவர் போன்றவர்களை ஊர் மறக்குமா?என்ன! பஸ் நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் இவரது சிறு பண்ணையில் வளர்க்கப்படும் மரக்கன்றுகள் புதுக்கோட்டையின் பல பகுதிகளில் மரமாகின்றன. யார் வந்து கேட்டாலும் இலவசம்தான். அதற்கு சில நிபந்தனை மட்டும்...

வழக்கறிஞர் டூ விவசாயி... 3 ஏக்கரில் இயற்கை வெள்ளாமை!

சினிமா பிரபலங்கள், ஐடி ஊழியர்கள், அரசுப்பணியில் இருப்பவர்கள் என அனைவரும் விவசாயம் பக்கம் திரும்பும் காலமிது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் கரிகலவாக்கத்தில், வானவில் இயற்கை வேளாண் பண்ணை என்ற பெயரில் மூன்று ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார் வழக்கறிஞர் வேங்கடபிரசாத். முதல் தலைமுறை பட்டதாரி என்பதைப்போல முதல் தலைமுறை விவசாயி ஆகியிருக்கும் வேங்கடபிரசாத்தை...

உயிரி பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்யும் முறைகள்!

ரசாயனத்திற்கு மாற்றாக செயல்படும் உயிரிப் பூச்சிக்கொல்லிகள் குறித்த அறிமுகத்தை கடந்த இதழில் கண்டோம். உயிரிப் பூச்சிக்கொல்லிகளின் வகைகள், பயன்பாடுகள் குறித்து இன்னும் விரிவாக பார்ப்போம். கடந்த 10 ஆண்டுகளில் உயிரிப் பூச்சிக்கொல்லி உபயோகத்தினால் அநேக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டிரைக்கோடெர்மா, டிரைக்கோகிரம்மா, என்பிவி போன்றவை அதிகரித்துள்ளது. இந்தியாவில் அநேக இடங்களில் உயிரிப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்....

செங்கம் வட்டாரத்திற்கு சிறப்பு சேர்க்கும் கற்பூர வாழை!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் குப்பநத்தம் அணை அருகாமையில் உள்ள பகுதிகளில் வாழை விவசாயம் கொடி கட்டி பறக்கிறது. இந்தப் பகுதிகளில் ஒன்றான துரிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த விநாயகம் என்பவர் கற்பூரவல்லி சாகுபடியில் நீண்ட கால அனுபவம் கொண்டவராக விளங்குகிறார். அவரைச் சந்தித்து வாழை சாகுபடி அனுபவம் குறித்து கேட்டோம். ``செங்கம் குப்பநத்தம், கொட்டாவூர், கிளையூர்...

தென்னை சாகுபடிக்கு பயிற்சி வகுப்புகள்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் வாயிலாக சான்றிதழ் பாடங்கள், வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு, பட்டயப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சான்றிதழ் பாடங்கள் அனைத்தும் செயல்முறை விளக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சியாளர்களை செயல்முறை விளக்கங்களில் ஈடுபடுத்தி அனைத்து தொழில்நுட்பங்களையும் அறியச் செய்து அவர்களை சுயதொழில் மேற்கொள்பவராகவும், தொழில் முனைவோராகவும் உருவாக்குவதற்கு...

டிராகன் ஃப்ரூட்! :இழந்ததை மீட்டுத்தந்த super crop

தித்திக்கும் திராட்சை பந்தல்கள்... மென்காற்றை உற்பத்தி செய்யும் மேற்குத்தொடர்ச்சி மலை... தேனி மாவட்டம் என உச்சரித்த அடுத்த நொடியே இந்த இயற்கை அற்புத காட்சிகள் எல்லாம் வந்து போகும். இத்தகைய தேனி மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயத்தைத் தொடர முடியாத சில பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வண்டியூர் என்ற...