திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் திடீரென குறுக்கே வந்த பெண்ணால், எதிர் திசையில் வாகனத்தில் வந்துகொண்டிருந்த விவசாயி சின்னச்சாமி நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து திருப்பூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
+
Advertisement