புதுடெல்லி: ஐரோப்பிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதல் காரணமாக விமான போக்குவரத்து சீர்குலைந்துள்ளது. கடும் தாமதம் காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதன் காரணமாக பிரஸ்ஸல்ஸ், பெர்லின், லண்டனின் ஹீத்ரோ உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதே போல் இந்திய விமான நிலையங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் ஒன்றிய அரசு அலர்ட் செய்துள்ளது.
+
Advertisement