வாஷிங்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸின் ஆஸ்டினில் உள்ள டார்கெட் என்ற கடைக்கு வெளியே பிற்பகல் 2:15 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத 32 வயதுடைய மர்ம நபர் வாகன நிறுத்தும் இடத்தில் நின்றிருந்த வாடிக்கையாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தாக்குதலுக்குப் பிறகு அந்த நபர் திருடப்பட்ட காரில் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்த நிலையில், அங்கு மூன்று பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை, மேலும் எந்த நோக்கமும் அடையாளம் காணப்படவில்லை என போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும், மர்ம நபரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.