Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சுற்றுச்சூழல் ஒப்புதலின்றி ஓராண்டு வெட்டி எடுத்த கற்களின் மதிப்பில் 100% தொகையை குவாரி உரிமையாளர் தர வேண்டும் என்ற அரசு உத்தரவு உறுதி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கல்குவாரி உரிமைதாரர்கள், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் 2016 முதல் 2017ம் ஆண்டு வரையிலான ஓராண்டு காலத்தில் வெட்டி எடுத்த கற்களின் மதிப்பில் நூறு சதவீத தொகையை இழப்பீடாக செலுத்தும்படி, குவாரி உரிமதாரர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து குவாரி உரிமம் பெற்றிருந்த 82 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தில் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற வேண்டும் என கூறியுள்ள நிலையில், ஒப்புதல் இல்லாமல் கல் குவாரி செய்தது சட்ட விரோதம்.

வெட்டி எடுக்கப்பட்ட கற்களின் மதிப்பில் நூறு சதவீத தொகையை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இழப்பீட்டுத் தொகையை செலுத்தும்படி அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. குவாரி உரிமைதாரர்கள் ஏற்கனவே செலுத்தியுள்ள கட்டணத்தை கழித்து விட்டு மீதத் தொகையை இழப்பீடாக செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மூன்று வாரங்களில் அரசு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசின் கடிதம் கிடைத்த இரண்டு மாதங்களில் இழப்பீட்டுத் தொகையை மனுதாரர்கள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்தார்.