Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் 10 பயணிகளுக்கு கத்திக்குத்து

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் டான்ஸ்காஸ்டர் நகரில் இருந்து தலைநகர் லண்டனுக்கு நேற்று முன்தினம் இரவு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலுக்குள் இருந்த நபர் ஒருவர் திடீரென கத்தியை எடுத்து பயணிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இதில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து ரயில் ஹண்டிங்டன் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் ரயிலுக்குள் கத்திக்குத்து நடத்திய மர்ம நபர் உட்பட 2 பேரை கைது செய்தனர். மேலும் படுகாயமடைந்த 10 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களில் ஒன்பது பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.