Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்!

கோவை: கோவை தொண்டாமுத்தூரில் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானை பிடிபட்டது.

அதிகாலை 4 மணியளவில் தொண்டாமுத்தூர் இச்சிக்குழி அருகே முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையில், மருத்துவர்கள் ராஜேஷ் , வெண்ணிலா குழுவினர் ரோலக்ஸ் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

இதையடுத்து கபில்தேவ், வாசிம், பொம்மன், சின்னத்தம்பி ஆகிய 4 யானைகளுடன் வனத் துறையினர் ரோலக்ஸ் காட்டு யானையை கட்டுப்படுத்தி வாகனத்தில் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.