மதுரை : எடப்பாடி பரப்புரை கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பணியாளர் தாக்கப்பட்டதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையில், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்கப்படுவது ஏற்கதக்கது அல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் ஆம்புலன்ஸ் பணியாளர் தாக்கப்பட்டது தொடர்பாக எடுத்த நடவடிக்கை பற்றி டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.
+
Advertisement