வாஷிங்டன்: கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தியதாக படகின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்துவதற்கும் அதிபர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இதுவரை போதை பொருள் கடத்திய 17 படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்நடத்தி உள்ளது.
+
Advertisement

