Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை என புகார்..!!

திருப்பூர்: பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்வர் - திருப்பூரைச் சேர்ந்த பிரீத்திக்கு 2024 செப்டம்பர்.15ல் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பிரீத்தி குடும்பத்தின் சார்பில் 120 சவரன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் தந்துள்ளனர். கணவர் வீட்டாருக்கு இன்னோவா கார் ஒன்றையும் பிரீத்தி வீட்டார் தரப்பில் தந்துள்ளனர். பிரீத்தி குடும்பத்தில் சொத்து விற்பனையில் ரூ.50 லட்சம் வருவதை கேட்டு கணவர் வீட்டார் துன்புறுத்தியதாக புகார்.

கடந்த ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்த பிரீத்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு வந்த காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் பிரீத்தியின் உறவினர்கள் முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி தந்ததை அடுத்து பெண்ணின் உடலை உறவினர்கள் பெற்றனர்.