Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமண ஏக்கத்தில் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை

ஆலந்தூர்: திருமண ஏக்கத்தில் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை நங்கநல்லூர் 2வது பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் ஐடெல் மகிழ்குமாரி. கடந்தாண்டு இவரது கணவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இவரது மூத்த மகன் டாக்டர் சர்ச்சில் பாஸ் லியாட். இவர் நங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தோல் சிகிச்சை மருத்துவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவருக்கு சில மாதங்களாக ஏராளமான பெண்களை பார்த்தும் எதுவும் அமையவில்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில், நேற்று மாலை தனது தாயிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி டாக்டர் சர்ச்சில் பாஸ் லியாட் வலியுறுத்தி கேட்டுள்ளார். இதன்பின்னர் இரவு படுக்கையறைக்கு சென்ற டாக்டர் மின்விசிறியில் சால்வையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்ததில், ஏற்கெனவே அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இருப்பினும் பழவந்தாங்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோதும் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து பழவந்தாங்கல் வழக்குபதிவு செய்து டாக்டரின் சடலத்தை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.