தி.மு.கழகத்தின் சாதனையை இனி எவராலும் இம்மண்ணில் படைக்க முடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
சென்னை: தி.மு.கழகத்தின் சாதனையை இனி எவராலும் இம்மண்ணில் படைக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காலத்தின் நிறம் கருப்பு சிவப்புஅறிவை மையப்படுத்தி ஆட்சியைப் பிடித்து, அறிவொளியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதையே தலையாய கடமையாக ஆற்றி வரும் தி.மு.கழகத்தின் சாதனையை இனி எவராலும் இம்மண்ணில் படைக்க முடியாது!
கருப்பும் - சிவப்பும் - நீலமும் ஒன்றிணைந்து நிற்கும்போது எப்படிப்பட்ட எதிரியும் இங்கு வாலாட்ட முடியாது என உணர்த்தும் கொள்கை மேடையாக திமுக75 வதுஅறிவுத்திருவிழாவை ஏற்பாடு செய்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும் துணைநின்ற இளைஞரணியின் தம்பிமார்களுக்கும் என் பாராட்டுகள்!திராவிடம் வெல்லும், மீண்டும் மீண்டும் வெல்லும்! அதைக் காலம் சொல்லும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

