Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தீபாவளி பண்டிகைக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே முடிந்தது

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே முடிந்தது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ரயில்களில் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக, இந்திய ரயில்வேயின் முன்பதிவு காலமானது பயண தேதியைத் தவிர்த்து 60 நாட்களாக உள்ளது.

இதன் அடிப்படையில் அக்.17ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு செல்வோருக்காக ரயில் முன்பதிவு காலை தொடங்கியது. தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான டிக்கெட் முடிந்தது. நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, சேரன், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு முடிந்தது. முன்பதிவு முடிந்ததால் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் காத்திருப்பு பட்டியலுக்கு சென்றன