சென்னை: ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஏற்கெனவே முடிந்துவிட்டது. முக்கிய ரயில்களில் காத்திருப்போர் எண்ணிக்கை 1,000 வரை பதிவாகியுள்ளது. எந்தெந்த ரயில்களுக்கு தேவை அதிகமாக உள்ளது என்று ஆய்வு செய்து, அதற்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில்; நாகர்கோவிலில் செப்.28, அக்5, 12, 19, 26ல் இரவு 11.15க்கு புறப்படும் ரயில் மறுநாள் பகல் 12.30க்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் செப்.29, அக்6, 13, 20, 27-ல் பிற்பகல் 8.30க்கு புறப்பட்டு காலை 5.15க்கு நாகர்கோவில் வரும்.
சென்ட்ரலில் செப்.25, அக்2, 9, 16, 23ல் இரவு 11.50க்குபுறப்படும் ரயில் மறுநாள் காலை 8.30க்கு போத்தனூர் சேரும். மறுமார்க்கம் போத்தனூரில் செப்.26, அக்3, 10, 17, 24-ல் மாலை 6.30க்கு புறப்பட்டு காலை 3.15க்கு சென்ட்ரல் வரும். சென்னை சென்ட்ரலில் செப்.24, அக்1, 8, 15, 22ல் பிற்பகல் 3.10க்கு புறப்பட்டு காலை 6.30க்கு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கம் செங்கோட்டையில் செப்.25, அக்2, 09, 16, 23-ல் இரவு 9க்கு புறப்பட்டு காலை 11.30க்கு சென்ட்ரல் வரும். நெல்லை சென்னை எழும்பூர் இடையே செப்.25, அக். 2, 9, 16, 23ல் இரவு 9.30க்கு சிறப்பு ரயில் இயக்கம். சென்னை எழும்பூர் - நெல்லை இடையே செப்.26, அக். 3,18, 17, 24-ல் நண்பகல் 12.30க்கு சிறப்பு ரயில் இயக்கம்.
தூத்துக்குடியில் இருந்து செப்.29, அக்.6, 13, 20, 27ல் இரவு 11.15க்கு புறப்படும் ரயில் காலை 10.45க்கு எழும்பூர் வரும். மறுமார்க்கம் எழும்பூரில் இருந்து செப்.30, அக்.7, 14, 21, 28-ல் பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.15க்கு சேரும். பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை காலை 8.00 மணி முதல் சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.