Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்வு

சென்னை: தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.1,800ஆக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.5,000ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ரூ.1,100ஆக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.4,100ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்ல ரூ.1,200ஆக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.3,000ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு வழக்கமான நாட்களில் ரூ.600 முதல் ரூ.900 வரை வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.3,600ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்வதற்கு வழக்கமாக ரூ.1,500 வசூலிக்கப்படும், தற்போது ரூ.4,000 வரை வசூலிக்கப்படுகிறது.