Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட சார்பில், மாவட்ட பேரவை கூட்டம் மற்றும் காஞ்சிபுரம் வட்ட பேரவை கூட்டம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சங்க கட்டிடத்தில் நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் திருவேங்கடம் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க மாநில நிர்வாகி ராஜேந்திரன் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில், ஓய்வூதியர்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவ நிதி ஒதுக்கிட்டை அதிகப்படுத்த வேண்டும். காஞ்சிபுரம் மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில், வட்ட கிளை தலைவராக ரவிக்குமார் செயலாளராக முத்து, பொருளாளராக கந்தசாமி, துணை தலைவர்களாக ஏகாம்பரம், வேணுகோபால் இணை செயலாளராக கோபால், எத்திராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.