Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மாவட்ட நீதிபதி மீதான விசாரணை அறிக்கையை நிர்வாக குழுவுக்கு அனுப்ப ஐகோர்ட் ஆணை!!

சென்னை: உள் நோக்கத்துடன் மாவட்ட நீதிபதி, காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது செய்ய உத்தரவிட்ட விவகாரத்தில் மாவட்ட நீதிபதி மீது நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் பதிவாளர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். மாவட்ட நீதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏதுவாக விஜிலன்ஸ் பதிவாளரின் விசாரணை அறிக்கையை நிர்வாக குழுவுக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கைது செய்ய உத்தரவிட்டார். காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டிருந்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.