Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து விவாதம் நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!!

டெல்லி : டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து விவாதம் நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தலைநகர் டெல்​லி​யில் காற்று மாசுப் பிரச்​சினை அதிக அளவில் நிலவி வரு​கிறது. இதனால் பொது​மக்​கள் சுவாசப் பிரச்​சினை உள்​ளிட்ட பல்​வேறு வியா​தி​களுக்கு ஆளாகின்​றனர். இதற்கு மத்தியில் நாடாளு​மன்ற குளிர்​காலக் கூட்​டத் தொடர் கடந்த திங்​கள்​கிழமை தொடங்​கி நடைபெற்று வருகிறது. இந்​நிலை​யில், டெல்​லி​யில் காற்று மாசுப் பிரச்​சினையை கட்​டுப்​படுத்த மத்​திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளு​மன்​றத்​துக்கு எதிர்க்​கட்​சித் தலைவர்​கள் காஸ் முகக்​கவசத்​துடன் வந்​தனர்.

இதனிடையே மத்திய அரசே நாடாளுமன்றத்தில் அளித்த அதிர்ச்சித் தகவலில், 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான வெறும் மூன்று வருட காலத்தில், டெல்லியில் உள்ள ஆறு முக்கிய அரசு மருத்துவமனைகளில் மட்டும் 2,00,000க்கும் மேற்பட்ட கடுமையான சுவாச நோய்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து விவாதம் நடத்த காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளித்துள்ளது. அவை நடவடிக்கைகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு, டெல்லி காற்று மாசு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று சண்டிகர் மக்களவை எம்.பி., மணீஷ் திவாரி, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.