Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி: முதல்வர் உத்தரவு

சென்னை: அரசு வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் தெற்கு செட்டியாப்பட்டி, சொரியன் தெருவைச் சேர்ந்த மாரிக்கண்ணு என்பவர் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றபோது அம்மாச்சத்திரம் அருகே இருசக்கர வாகனம் ஒன்று மோதிய விபத்தில், மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த மாரிக்கண்ணுவின் உடல் உறுப்புகள் அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் தானமாக வழங்கப்பட்டு அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மாரிக்கண்ணு குடும்பத்தினரின் தியாக உணர்வை தமிழ்நாடு அரசு போற்றுகிறது. இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.