Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவில் பயங்கரம் கடலூர் பெண்ணை சுட்டு கொன்று புதுச்சேரி கணவர் தற்கொலை: உடலை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு

புதுச்சேரி: அமெரிக்காவில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் உடலை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர். புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (39) என்பவருக்கும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சவுமியா (31) என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாலசுப்பிரமணியம் அமெரிக்காவில் சிறை வார்டனாக பணியாற்றி வந்தார். இதையடுத்து தம்பதி அமெரிக்காவிலேயே வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். இந்நிலையில் சவுமியா வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக, பாலசுப்பிரமணியனுக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி சவுமியாவை, பாலசுப்பிரமணியம் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து ெகாண்டதாக பாலசுப்பிரமணியன் மற்றும் சவுமியா குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அமெரிக்காவில் இறந்த பாலசுப்பிரமணியன் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் 3 குழந்தைகளும் அங்கே அரசு தயவில் வளர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் புதுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.