Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாணவர்கள் தகராறு தடுக்க முயன்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு

திருச்சி: திருச்சி சிங்கர் கோவில் தெருவில் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே நேற்று மாலை திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த ஆசிரியர் சிவக்குமார், தகராறை தடுக்க சென்றார். இதில் ஆசிரியரை தலையிலும், ஒரு மாணவரின் கையிலும் அரிவாளால் வெட்டிவிட்டு ஓடி விட்டனர். இதில் காயம் அடைந்த இருவரையும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மாணவர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த வீடியோவுக்கு எதிராக மற்றொரு மாணவர் கமெண்ட் செய்ததால் தகராறு ஏற்பட்டதாக தெரிய வந்தது.