Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புழல் சிறையில் போதை மாத்திரை கஞ்சா பறிமுதல் : 4 கைதிகள் மீது வழக்கு

புழல்: புழல் சிறைக் கைதிகளிடம், செல்போன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க அவ்வப்போது சிறைக்காவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, புழல் சிறையில் காவலர்கள் நேற்று முன்தினம் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் சோதனை செய்தபோது, 60 கிராம் கஞ்சா, 14 போதை மாத்திரைகள் சிக்கியது.

தொடர்ந்து, சிறைக் காவலர்கள் விசாரித்ததில், திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை சென்றபோது, நண்பர்கள் மூலமாக கிடைத்த கஞ்சா, மற்றும் போதை மாத்திரைகளை ஆசனவாயில் அடைத்து சிறைச்சாலைக்குள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, சிறைக் கைதிகளிடமிருந்து 60 கிராம் கஞ்சா, 14 போதை மாத்திரைகள் ஆகியவற்றை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், புழல் சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், புழல் போலீசார் கிருபாகரன், சொட்டை செல்வா, அஜித்குமார், நரேந்திரகுமார் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.