Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

பூந்தமல்லி: அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்தவர் வில்சன்(35), டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் திருவேற்காடு அடுத்த பெருமாளாகரம் பகுதியில் இறந்து போனதால் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று அவரது மனைவியுடன் வந்துள்ளார். அப்போது குடிபோதையில் வந்த வில்சன் அங்கு சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், மேலும் அவரது மனைவியை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அங்கிருந்த அவரது உறவினர்கள் வில்சனை அடித்ததாகவும் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வில்சன் அந்த பகுதியில் வீட்டின் மீது அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் மீது ஏறி நின்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் தன்னை அடித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து திருவேற்காடு போலீசார் மற்றும் ஆவடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து டவர் மீது ஏறியவரை கீழே இறங்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த நபர் கீழே இறங்க மறுத்ததால் அவரது உறவினர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வில்சனை அடித்த நபரை போலீசார் வேனில் ஏற்றிக்கொண்டு அந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தினர். இதனைப் பார்த்த பிறகு தான் வில்சன் செல்போன் டவர் மேல் இருந்து கீழே இறங்கி வந்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.