Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிராவல் மண்ணை அள்ளிய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்: தாசில்தார் நடவடிக்கை

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த குண்டடம்‌ அருகே அனுமதியின்றி சட்டவிரோதமாக கிராவல் மண் வெட்‌டி கடத்த முயற்சி சம்பவத்தில் 2 டிப்பர் லாரிகள், ஒரு மணல் அள்ளும் இயந்திரத்தை தாசில்தார் பறிமுதல் செய்தார். திருப்பூர் மாவட்டம், குண்டடம் அடுத்துள்ள ஜோதியம்பட்‌டி சண்முகசுந்தரம் என்பவரது நிலத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டு டிப்பர் லாரியில் கடத்தப்படுவதாக தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாசில்தார் அங்கு கிராவல் மண்ணை வெட்டி எடுத்த இயந்திரம், மண்ணை கடத்த பயன்படுத்தப்பட்ட 2 டிப்பர் லாரிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து குண்டடம் போலீசில் ஒப்படைத்தார். மேலும் இது தொடர்பாக தாசில்தார் குண்டடம் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் குண்டடம் போலீஸ் துணை ஆய்வாளர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.