தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.