நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பிற்பகலில் ஆஜராக ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு..!!
மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பிற்பகலில் ஆஜராக ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத விருதுநகர் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. செட்டிப்பட்டி ஊராட்சி சார்பில் சமுதாய கூடம் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனுதாரர் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனிநபர் நிலத்தில் சமுதாய கூடம் கட்டக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.



