Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முதல் காதலனுடன் நெருக்கமாக இருந்த ஆபாச படங்களை இளம்பெண்ணுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்: 2வது கள்ளக்காதலன் கைது

வேலூர்: முதல் காதலனுடன் நெருக்கமாக இருந்த படங்களை இளம்பெண்ணுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய 2வது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் 31 வயது இளம்பெண், அழகு கலை நிபுணர். இவருக்கு திருமணமாகி கணவர், 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இளம்பெண் அழகுகலை பயிற்சி குறித்தும், அதுதொடர்பான வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ெவளியிட்டு வந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இதைபார்த்த காட்பாடி பகுதியை சேர்ந்த யுவராஜ்(30) என்பவர், இளம்பெண்ணுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு பழகி வந்துள்ளார். நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அப்போது இளம்பெண், யுவராஜூடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை தன்னுடைய செல்போனில் போட்டோ எடுத்து வைத்திருந்தாராம்.

இந்நிலையில் இளம்பெண்ணுக்கும், வீரிசெட்டிபல்லி கிராமத்தை சேர்ந்த விக்ரம்(34) என்பவருடனும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. அப்போது விக்ரம், இளம்பெண்ணின் செல்போனில் யுவராஜூடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்த போட்டோக்களை இளம்பெண்ணுக்கு தெரியாமல் தனது செல்போனுக்கு அனுப்பிக்கொண்டாராம். பின்னர் அவ்வப்போது இளம்பெண்ணிடம் பணம், தங்க நகைகளை செலவுக்காக வாங்கி வந்துள்ளார். இதையறிந்த இளம்பெண்ணின் கணவர், விக்ரமை தட்டிக்கேட்டுள்ளார். மேலும் நகை, பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் பரதராமி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்ரமை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விக்ரம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பின்னர் அவர், இளம்பெண்ணும், யுவராஜூம் நெருக்கமாக இருந்த போட்டோக்களை இளம்பெண்ணுக்கு அனுப்பி வைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், இதுகுறித்த பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்ரமை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.