கூட்டுறவு மற்றும் சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் 5308 தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணை தொகை: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
சென்னை: அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி -II ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33 % மற்றும் கருணைத் தொகையாக 11.67 % என மொத்தம் 20 % போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33 % மற்றும் கருணைத் தொகையாக 1.67 % என மொத்தம் 10% போனஸ் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 5308 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மேலும், மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ரூ.353.37 லட்சங்கள் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.