Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் ரூ.2.85 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தீவிரம்

*எம்எல்ஏ ஆய்வு

கலசப்பாக்கம் : ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் ரூ.2.85 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆய்வு செய்தார்.ஜவ்வாதுமலை ஒன்றியம், நம்பியபட்டு ஊராட்சியில் முதலை மடவு பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது நம்பியம்பட்டு, மேல்குப்ப சாத்தனூர், கீழ்குப்ப சாத்தனூர், பெரிய வீரப்பனூர், சின்ன வீரப்பனூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நீண்ட தூரம் சுற்றிவர வேண்டிய நிலை இருந்து வந்தது.

எனவே, மலைவாழ் மக்களின் நலன் கருதி நடுப்பட்டு மற்றும் முதலை மடவு கிராமங்களை இணைக்கும் விதத்தில் உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என எம்எல்ஏ பெ.சு.தி. சரவணனிடம் கோரிக்கை வைத்தனர்.இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரிடம் எம்எல்ஏ வலியுறுத்தியதின் பேரில் ரூ.2.40 கோடி மதிப்பில் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், ரூ.1.90 கோடி மதிப்பில் ஜவ்வாதுமலை, அமிர்தி, முதலை மடவு சாலை அமைக்கும் பணி தொடங்க உள்ளது.

இந்நிலையில், உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அப்போது, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் மகேஸ்வரி செல்வம், முன்னாள் ஊராட்சி தலைவர் சாந்தி ஜெயராமன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் தவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, முட்நாட்டூர் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடையை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் திறந்து வைத்தார்.